ADDED : ஏப் 02, 2025 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல், முந்தைய ஆண்டைக் காட்டிலும், 9.90 சதவீதம் அதிகரித்து, 1.96 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
கடந்த 2024-25 நிதியாண்டுக்கான மொத்த ஜி.எஸ்.டி., வசூல் 22.08 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 9.40 சதவீதம் அதிகமாகும். ரீபண்டுகளை சரி செய்த பின், கடந்த 2025ம் நிதியாண்டுக்கான நிகர ஜி.எஸ்.டி., வசூல் 19.56 லட்சம் கோடி ரூபாயாகும். இது 8.60 சதவீதம் அதிகமாகும்.
மார்ச் மாத வசூல்
வகை ரூபாய் (கோடியில்)
மத்திய ஜி.எஸ்.டி., 38,100
மாநில ஜி.எஸ்.டி., 49,900
ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., 95,900
கூடுதல் வரி 12,300