sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார் கழி வழிபாடு -14

/

மார் கழி வழிபாடு -14

மார் கழி வழிபாடு -14

மார் கழி வழிபாடு -14


ADDED : டிச 28, 2024 06:41 PM

Google News

ADDED : டிச 28, 2024 06:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாவை - பாடல் 14


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்

பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும்,தாமரை போன்ற விரிந்த கண்களை உடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!.

திருவெம்பாவை - பாடல் 14


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்கோதை குழலாட வண்டின் குழாம் ஆடசீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடிவேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிசோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடிஆதி திறம்பாடி அந்தமா மாபாடிபேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

பொருள்: ஆண்கள் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் ஆட, அவர்களின் தங்கநகைகள் ஆட, பெண்களின் கூந்தல்ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்து இருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம்பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லி நீராடுங்கள். ஜோதி வடிவாய் திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள்.

முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் வளையல்கள் அணிந்த தாயுமானவாய் விளங்கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி நீராடுங்கள்.






      Dinamalar
      Follow us