ADDED : ஜன 08, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் புதிதாக மாநில செயலராக சண்முகம் பொறுப்பேற்றார்.
அதன்பின் அவர் அளித்த பேட்டி: பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழுவில் கவர்னரே முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அராஜகத்தின் உச்சம். தி.மு.க., அரசு கடந்த 3 ஆண்டுகளில் சில தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் யார் நிறுத்தப்பட்டாலும் ஆதரவளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

