ADDED : மார் 12, 2025 09:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: மாசிமகத்தையொட்டி கும்பகோணம், சக்கரபாணி கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களான சக்கரபாணி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில், ராஜகோபாலசாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் கடந்த 3ம் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின், முக்கிய நிகழ்வான இன்று (மார்ச் 12), சக்கரபாணி கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சக்கர ராஜா, சக்கரராஜா என கோஷமிட்டப்படி, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.