ADDED : மார் 12, 2026 07:17 AM

சென்னை: ''கூட்டணியில் ம.தி.மு.க.,வால் எந்த பிரச்னையும் ஏற்படாது,'' என, அக்கட்சியின் முதன்மை செயலர் துரை கூறினார்.
ம.தி.மு.க., உயர்நிலை குழு அவசர ஆலோசனை கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டம் துவங்கும் முன், துரை அளித்த பேட்டி: ம.தி.மு.க., கடந்த ஒன்பது ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் உள்ளது; நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறது. தொகுதி பங்கீட்டில் எவ்வித கால தாமதமும் ஏற்படவில்லை. கூடுதல் கட்சிகள் சேர்வதால், கூட்டணி பலம் பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் பா.ஜ., நுழையக்கூடாது என்ற அடிப்படையில், 'சீட்' எண்ணிக்கையை குறைத்துக் கொண்டிருக்கிறோம். ம.தி.மு.க., நலனை விட, தமிழகத்தின் நலன் காக்கப்பட வேண்டும். தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வால் எந்த பிரச்னையும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் ம.தி.மு.க., போட்டியிடும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

