sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பம்பரம் கேட்டு ம.தி.மு.க., மனு ஆணையத்திற்கு உத்தரவு

/

பம்பரம் கேட்டு ம.தி.மு.க., மனு ஆணையத்திற்கு உத்தரவு

பம்பரம் கேட்டு ம.தி.மு.க., மனு ஆணையத்திற்கு உத்தரவு

பம்பரம் கேட்டு ம.தி.மு.க., மனு ஆணையத்திற்கு உத்தரவு


ADDED : மார் 07, 2024 11:42 AM

Google News

ADDED : மார் 07, 2024 11:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தாக்கல் செய்த மனுவில், '1996 முதல் பம்பரம் சின்னத்தில், ம.தி.மு.க., போட்டியிட்டு வருகிறது.

'கடந்த 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில், 6 சதவீதத்திற்கு குறைவான ஓட்டுகள் பெற்றதாக, அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. 2014 தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

'வரும் லோக்சபா தேர்தலில், பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி, தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.

தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி, ''விண்ணப்பம் முறையாக பரிசீலிக்கப்படும்,'' என்றார்.

இதையடுத்து, விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us