sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கட்சி கொடிகளை அகற்றிய ம.தி.மு.க.,வினர்

/

கட்சி கொடிகளை அகற்றிய ம.தி.மு.க.,வினர்

கட்சி கொடிகளை அகற்றிய ம.தி.மு.க.,வினர்

கட்சி கொடிகளை அகற்றிய ம.தி.மு.க.,வினர்


ADDED : ஜூலை 19, 2025 03:45 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து, வாகனங்களிலிருந்து கட்சிக் கொடிகளை ஆவேசத்துடன் அகற்றினர்.

ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா. மாமல்லபுரம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கிறார். கடந்த 1996 - 2001ல், மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவராக பதவி வகித்தார். அவரது மனைவி துர்காசினி, தற்போது நகரமன்ற 14ம் வார்டு உறுப்பினராக உள்ளார்.

ம.தி.மு.க., துவக்க காலம் முதல், அக்கட்சியில் மல்லை சத்யா உள்ளார். அவருக்கும், கட்சி பொதுச்செயலர் வைகோ மற்றும் முதன்மைச் செயலரும், வைகோவின் மகனுமான துரை ஆகியோருக்கும், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பனிப்போர், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வைகோ, மல்லை சத்யாவை துரோகி என, கடுமையாக விமர்சித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, வைகோவை மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், மாமல்லபுரம் ம.தி.மு.க.,வினர், சத்யாவிற்கு ஆதரவாக, கட்சியிலிருந்து விலகுவதாக, நேற்று அறிவித்தனர். தங்களின் கார், ஆட்டோ ஆகியவற்றில் பறக்கவிட்டிருந்த, ம.தி.மு.க., கொடிகளை அகற்றியும், பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தும் பெரிய கொடிகளை வீசியெறிந்தும் எதிர்ப்பை காட்டினர்.






      Dinamalar
      Follow us