ADDED : பிப் 16, 2024 05:26 AM

சென்னை : லோக்சபா தேர்தலில் போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி, ம.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க., வேட்பாளர்கள், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இம்முறை தங்களின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க., விரும்புகிறது.
எனவே, வரும் லோக்சபா தேர்தலில், தங்கள் வேட்பாளருக்கு, பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி, ம.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேற்று, தலைமை செயலகத்தில் உள்ள, அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது, லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி, தேர்தல் கமிஷனிடம் அளித்துள்ள கடிதத்தின் நகலை வழங்கினார்.