வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் உண்ணாவிரதம்
வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் உண்ணாவிரதம்
ADDED : ஜன 07, 2026 12:00 AM

சென்னை: வெளி நாடுகளில் மருத் துவம் படித்த மாணவர்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தங்களை பயிற்சி பெற அனுமதிக்கக்கோரி, சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் மற்றும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் பிரிவு சார்பில், இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில் பங்கேற்றவர்கள், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்க ளுக்கு, தற்கா லிக சான்றிதழ் வழங்குவதை தாமதப்படுத்தக் கூடாது, தேசிய மருத்து வ ஆணையத்தின் உத்தரவுபடி, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில, பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும், மொத்த பயிற்சி இடங்களில், 20 சதவீதத்தை வெளிநாடுகளில் மருத்துவம் முடித்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, வி.சி., தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

