sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அடித்து துவைத்த மழை...! 29 நாட்கள் கடந்து மேட்டூர் அணையில் ஒரு மேஜிக்

/

அடித்து துவைத்த மழை...! 29 நாட்கள் கடந்து மேட்டூர் அணையில் ஒரு மேஜிக்

அடித்து துவைத்த மழை...! 29 நாட்கள் கடந்து மேட்டூர் அணையில் ஒரு மேஜிக்

அடித்து துவைத்த மழை...! 29 நாட்கள் கடந்து மேட்டூர் அணையில் ஒரு மேஜிக்

4


ADDED : அக் 23, 2024 10:29 AM

Google News

ADDED : அக் 23, 2024 10:29 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்; தொடர் மழையை அடுத்து 29 நாட்களுக்கு பின்னர் மேட்டூர் அணை 100 அடியை எட்டி இருக்கிறது.

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அக்.21ம் தேதி நிலவரப்படி விநாடிக்கு 18,094 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

நேற்றைய தினம், சற்று குறைந்து 17,856 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து, 29,850 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 100.01 அடியை எட்டி உள்ளது. நீர் இருப்பு 64.85 டி.எம்.சி. ஆக இருக்கிறது.

இதன் மூலம் 29 நாட்களுக்கு பிறகு நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 7,500 கனஅடி வீதமும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்காக விநாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, நீரின் அளவு வெகுவாக சரிந்ததால் அக்டோபர் 14ம் தேதி அணையின் நீர்மட்டம் 89 அடிக்கு சரிந்தது, குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us