சட்டசபை மைக்ரோ அப்சர்வர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு நியமனம்
சட்டசபை மைக்ரோ அப்சர்வர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு நியமனம்
ADDED : செப் 27, 2011 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: சட்டசபை தேர்தலில் நியமிக்கப்பட்ட மைக்ரோ அப்சர்வர்களை, உள்ளாட்சித் தேர்தலில் நியமிக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் கண்காணிப்பு பணிக்காக மைக்ரோ அப்சர்வர்களாக, மத்திய அரசு அலுவலர்களை தேர்தல் கமிஷன் நியமித்திருந்தது. இவர்களையே உள்ளாட்சித்தேர்தலிலும் அப்சர்வர்களாக நியமிக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் சட்டசபை தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டு சாவடி கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுவர்.

