ADDED : செப் 10, 2024 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மிலாது நபி பண்டிகையையொட்டி செப்., 16 அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 'செப்., 4 பிறை தென்பட்டதால் மிலாது நபி செப்., 17கொண்டாடப்பட உள்ளது.
எனவே, அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை ஹாஜி, அரசுக்கு கடிதம் எழுதினார்.
அதை ஏற்ற அரசு, மிலாது நபி பண்டிகையை ஒட்டி செப்.16ம் தேதிக்கு பதிலாக செப். 17 அரசு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தலைமை செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.