ADDED : ஜன 12, 2026 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில், கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது, கஞ்சா விற்பனை தொடர்பாக 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் முறையாக கண்காணிக்க தவறியதே, அவர் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட காரணம்.
இதற்கிடையே, 'தமிழகத்தில் கஞ்சா புழக்கமே இல்லை' என உறுதிபடக் கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடனேயே, அந்த பெண் எடுத்துள்ள புகைப்படமும், 'அவர் தி.மு.க., நிர்வாகி' என பரவும் தகவலும், தமிழகத்தில் தி.மு.க., தான் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
எனவே, கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட அந்த பெண்ணிடம், விரிவான விசாரணை நடத்தி, பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்து, போதை பொருள் விற்போரை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,

