sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உதயநிதி துணை முதல்வராக நாங்கள் போட்ட தீர்மானம் வெற்றி அமைச்சர் பொன்முடி பெருமிதம்

/

உதயநிதி துணை முதல்வராக நாங்கள் போட்ட தீர்மானம் வெற்றி அமைச்சர் பொன்முடி பெருமிதம்

உதயநிதி துணை முதல்வராக நாங்கள் போட்ட தீர்மானம் வெற்றி அமைச்சர் பொன்முடி பெருமிதம்

உதயநிதி துணை முதல்வராக நாங்கள் போட்ட தீர்மானம் வெற்றி அமைச்சர் பொன்முடி பெருமிதம்

1


ADDED : செப் 30, 2024 05:19 AM

Google News

ADDED : செப் 30, 2024 05:19 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: உதயநிதி துணை முதல்வராக, விழுப்புரத்தில் நாங்கள் போட்ட தீர்மானம் நிறைவேறியதில் மகிழ்ச்சி அளிக்கிறது என, அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

விழுப்புரத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்த தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், இளைஞரணி செயலாளர் உதயநிதியை, துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக இளைஞர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த திறமையுள்ள அமைச்சர் உதயநிதியை, துணை முதல்வராக நியமித்துள்ளதை, விழுப்புரம் மாவட்டம் சார்பாக வரவேற்கிறோம்.

நான், பெரியார் தொண்டன், கருணாநிதி வழி வந்தவன், அண்ணாதுரை கொள்கையை ஏற்றவன், முதல்வர் ஸ்டாலினுடன் நெருங்கி பழகியவன் என்ற அடிப்படையில், உதயநிதி துணை முதல்வரானதை அன்போடு வாழ்த்துகிறேன்.

அவரது வருங்காலம் சிறப்பாக அமையும். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் வலு சேர்ப்பதாக உதயநிதியின் செயல்பாடு அமையும்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.






      Dinamalar
      Follow us