பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் புகார் அளிக்கின்றனர்; சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் புகார் அளிக்கின்றனர்; சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
ADDED : பிப் 20, 2025 12:32 PM

சென்னை: உண்மையான பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கின்றனர் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் ரகுபதி அளித்த பேட்டி: பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு இப்பொழுது தான் உண்மையான பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு முன் மாணவிகள் அச்சம் உணர்வோடு இருந்தார்கள். யாரிடம் சொல்வது, சொன்னால் ஆசிரியர் தனது மதிப்பெண்களை குறைத்து விடுவாரோ, பழி வாங்கி விடுவாரோ என்ற பயம் எல்லாம் மாணவிகளுக்கு இருந்தது.
இப்போது மாணவிகளுக்கு தைரியம் வந்து இருக்கிறது. அச்சம் மாணவிகள் மத்தியில் நீங்கியுள்ளது. இந்த ஆட்சியில் உண்மையான பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அரசின் மீது உள்ள நம்பிக்கையை இ.பி.எஸ்., அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
குற்றங்கள் நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவாளிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோமா என்பது தான் முக்கியம். அதனை இந்த அரசு துரிதமாக எடுத்து இருக்கிறது. பெண்களுக்கு தி.மு.க., அரசு பாதுகாப்பை தருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. இ.பி.எஸ்.,க்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

