sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பயிர் கடன் வழங்க ரூ.10,000 கோடி; 'நபார்டு' வங்கியிடம் அமைச்சர் கோரிக்கை

/

 பயிர் கடன் வழங்க ரூ.10,000 கோடி; 'நபார்டு' வங்கியிடம் அமைச்சர் கோரிக்கை

 பயிர் கடன் வழங்க ரூ.10,000 கோடி; 'நபார்டு' வங்கியிடம் அமைச்சர் கோரிக்கை

 பயிர் கடன் வழங்க ரூ.10,000 கோடி; 'நபார்டு' வங்கியிடம் அமைச்சர் கோரிக்கை


ADDED : டிச 05, 2025 04:28 AM

Google News

ADDED : டிச 05, 2025 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தமிழக விவசாயிகளுக்கு, கூட்டுறவு வங்கிகளில் இந்தாண்டில், 20,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க, அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. குறுகிய கால பயிர்க் கடனுக்கான நிதியாக, 'நபார்டு' வங்கி, 3,730 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

''இதை, 10,000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு சார்பில் கூட்டுறவு மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது.

இதில், நபார்டு வங்கியின் தமிழக மண்டல அலுவலக முதன்மை பொது மேலாளர் ஆனந்த், தமிழக கூட்டுறவு துறை செயலர் சத்யபிரதா சாஹு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது:

தமிழகத்தில் இந்தாண்டில் பயிர்க்கடன் இலக்காக, 20,000 கோடி ரூபாயை அரசு நிர்ணயம் செய்துள்ளது. குறுகிய கால பயிர்க் கடனுக்கான நிதியாக நபார்டு வங்கி, 18.65 சதவீதம் அதாவது, 3,730 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

இதை, 50 சதவீத அளவிற்கு அதாவது, 10,000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கினால், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் பயன்பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us