sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 நெடுஞ்சாலைகளில் கிலோ மீட்டர் கற்கள் நடும்படி அமைச்சர் வேலு உத்தரவு

/

 நெடுஞ்சாலைகளில் கிலோ மீட்டர் கற்கள் நடும்படி அமைச்சர் வேலு உத்தரவு

 நெடுஞ்சாலைகளில் கிலோ மீட்டர் கற்கள் நடும்படி அமைச்சர் வேலு உத்தரவு

 நெடுஞ்சாலைகளில் கிலோ மீட்டர் கற்கள் நடும்படி அமைச்சர் வேலு உத்தரவு


ADDED : டிச 31, 2025 06:38 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள சாலைகளில், கிலோ மீட்டர் கற்களை, விரைவாக நட வேண்டும்,'' என, துறையின் அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு தலைமையில், நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இதில், நெடுஞ்சாலை துறை செயலர் செல்வராஜ், திட்ட இயக்குநர் பாஸ்கர பாண்டியன், அனைத்து தலைமைப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசியதாவது:

வடகிழக்கு பருவமழை யால், பல சாலைகள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை சீரமைத்து, நல்ல முறை யில் பராமரிக்க வேண்டும்.

சாலை ஓரங்களில் உள்ள முள்புதர்களை அகற்ற வேண்டும். பல சாலைகளில், மழைநீர் வடிய இயலாத நிலை உள்ளது. மழைநீர் வடியும் வகை யில், அவற்றை சீரமைக்க வேண்டும் .

மாநில நெடுஞ்சலை மட்டுமின்றி, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலைகளில், அருகில் உள்ள ஊர் எத்தனை கிலோ மீட்டரில் உள்ளது என்பதை தெரிவிக்கும், கிலோ மீட்டர் கற்கள் இல்லை. அதுபோன்று கிலோ மீட்டர் இல்லாத இடங்களைக் கண்டறிய வேண்டும்.

அங்கு விரைவாக, கிலோ மீட்டர் கற்களை நடவேண்டும். இப்பணிகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள், பணிகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் .

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us