UPDATED : ஆக 01, 2011 02:03 PM
ADDED : ஆக 01, 2011 12:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக போலீசாரின் அராஜக போக்கை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முன்பு தி.மு.க.,பொருளாளர் மு.க., ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடர்ந்து சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பல வேன்களில் ஏற்றி தொண்டர்களை போலீசார் அழைத்து சென்றனர். போராட்டத்தில் கைதான ஸ்டாலின், மேயர் சுப்ரமணியம் உள்ளிட்ட தி.மு.க.,வினர் விடுதலை செய்யப்பட்டனர்.

