sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வேளாங்கன்னியில் நடமாடும் ஏ.டி.எம்.,

/

வேளாங்கன்னியில் நடமாடும் ஏ.டி.எம்.,

வேளாங்கன்னியில் நடமாடும் ஏ.டி.எம்.,

வேளாங்கன்னியில் நடமாடும் ஏ.டி.எம்.,


ADDED : ஆக 19, 2011 06:23 PM

Google News

ADDED : ஆக 19, 2011 06:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்: வேளாங்கன்னி மாதா கோவில் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, நடமாடும் ஏ.டி.எம்., மையங்கள் செயல்பட உள்ளதாக, கலெக்டர் முனுசாமி கூறினார்.

நாகை அடுத்த, வேளாங்கன்னி மாதா கோவில் ஆண்டுத் திருவிழா, ஆக., 29ம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் முனுசாமி தலைமையில் நடந்தது. அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் முனுசாமி கூறியதாவது: திருவிழாவை முன்னிட்டு, வேளாங்கன்னியில் ஒரு வழி பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகர் முழுவதும், 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வேளாங்கன்னியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம்., மையங்களில் ஒரே நேரத்தில், ஏராளமானோர் பணம் எடுப்பது சிரமம் என்பதால், நடமாடும் ஏ.டி.எம்., மையங்கள் செயல்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.






      Dinamalar
      Follow us