sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நடமாடும் மருத்துவமனை; சத்யசாய் சேவா நிறுவனங்கள் அர்ப்பணிப்பு

/

நடமாடும் மருத்துவமனை; சத்யசாய் சேவா நிறுவனங்கள் அர்ப்பணிப்பு

நடமாடும் மருத்துவமனை; சத்யசாய் சேவா நிறுவனங்கள் அர்ப்பணிப்பு

நடமாடும் மருத்துவமனை; சத்யசாய் சேவா நிறுவனங்கள் அர்ப்பணிப்பு


ADDED : பிப் 21, 2024 06:36 AM

Google News

ADDED : பிப் 21, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில், ஸ்ரீ சத்யசாய் நடமாடும் மருத்துவமனை சேவை, நேற்று கோவை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், நடமாடும் மருத்துவ சேவை புட்டபர்த்தியில், 2006ம் ஆண்டு பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவால் துவங்கப்பட்டது. 2014ல் சென்னையில் துவங்கப்பட்டது.

பின், கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் வளாகத்திலுள்ள, வித்ய பாரதி மஹாலில், நேற்று காலை 11:00 மணிக்கு இந்த சேவை துவங்கியது.

சேவை


ஸ்ரீ சத்ய சாய் சேவா சென்ட்ரல் டிரஸ்ட் பிரசாந்தி நிலைய நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர் கொடியசைத்து, நடமாடும் மருத்துவ சேவையை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ரத்னாகர் பேசியதாவது:



நாம் சஞ்சலமடைந்திருக்கும் போதும், அமைதி தேவைப்படும் போதும், பிரச்னைகளுக்கான தீர்விற்காகவும் பகவானிடம் செல்கிறோம். மரணம், ஜனனம் எது வந்தாலும் அவரையே அணுகுகிறோம்.

ஏழை மக்களுக்கு


'ஏழைகளுக்காக வாழ்வேன், சேவை செய்வேன், ஏழை மக்களுக்காக உயிரையும் விட சித்தமாக இருக்கிறேன்' என்று சொன்னார் பகவான் சத்யசாய் பாபா. இந்த நிறுவனத்தின் அடித்தளமே அது தான். அந்த துாய நோக்கம் மற்றும் உணர்வு தான், உலகம் முழுக்க பரந்து விரிந்து உள்ளது.

அமெரிக்காவிலுள்ள பிரசாந்தி டிரஸ்ட், இந்த நடமாடும் மருத்துவ வாகனத்தை வழங்கி உதவியிருக்கிறது. எங்கெல்லாம் நல்ல பணி நடக்கிறதோ, அங்கெல்லாம் மக்கள் கவர்ந்திழுக்கப்படுவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

'வீடு தேடி சென்று மருத்துவம்'

ரத்னாகர் கூறியதாவது: இந்த நடமாடும் மருத்துவ வாகனத்தில், மகளிர் மற்றும் குழந்தை நல டாக்டர், பொது மற்றும் கண் மருத்துவர் இருப்பர்; நோயாளிகளுக்கான முழுமையான மருத்துவ சேவையை வழங்குவர். மருந்தகம், மருத்துவ பரிசோதனை ஆய்வகம், இ.சி.ஜி., எக்ஸ்-ரே வசதிகள் உள்ளன.நடமாடும் மருத்துவ வாகனத்தின் வாயிலாக, மருத்துவ சேவை ஏழை மக்களின் வீடு தேடி செல்லும். கோவைக்கு அருகே உள்ள மாவட்டங்களிலும், இனி மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மழைவாழ் மற்றும் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தவும், வாரந்தோறும் ஞாயிறன்று இரு முகாம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.இதன் வாயிலாக, மருத்துவ வசதி இல்லாத மலை கிராமங்கள், மருத்துவ வசதியில் தன்னிறைவை எட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us