sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'அமரன்' படத்தில் இடம் பெற்ற மொபைல் போன் எண் காட்சி மாற்றம்

/

'அமரன்' படத்தில் இடம் பெற்ற மொபைல் போன் எண் காட்சி மாற்றம்

'அமரன்' படத்தில் இடம் பெற்ற மொபைல் போன் எண் காட்சி மாற்றம்

'அமரன்' படத்தில் இடம் பெற்ற மொபைல் போன் எண் காட்சி மாற்றம்


ADDED : டிச 07, 2024 03:32 AM

Google News

ADDED : டிச 07, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அமரன் படத்தில், பொறியியல் மாணவரின் மொபைல் போன் எண் இடம்பெற்றிருந்த காட்சியை மாற்றி விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துஉள்ளது.

சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்த பொறியியல் மாணவர் வாகீசன் என்பவர் தாக்கல் செய்த மனு:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், அமரன் படத்தை, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்தது. இந்தப் படத்தில், கதாநாயகியான சாய் பல்லவியின் மொபைல் போன் எண் காட்டப்பட்டது. அந்த எண், என் பயன்பாட்டில் உள்ளது.

திரைப்படத்தில் என் மொபைல் எண் வந்ததால், பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அதற்கு அழைப்புகள் வந்தன. ஆயிரக்கணக்கான அழைப்புகளால், என்னால் நிம்மதியாக துாங்க முடியவில்லை; படிக்க முடியவில்லை.

எனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் தான் காரணம். அவர்களின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையை எடுத்து சென்றும், அவர்கள் தவறை திருத்தவில்லை.

எனவே, 1.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டும். படத்தை ஓ.டி.டி., தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி சவுந்தர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, 'மனுதாரரின் மொபைல் போன் எண் இடம் பெற்றிருந்த காட்சியில், எண்கள் மறைக்கப்பட்டு விட்டன. தணிக்கை குழுவிடம் புதிதாக சான்றிதழ் பெறப்பட்டுள்ளது' என்றனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, தொடர்ந்து அழைப்பு வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, 'தொடர் அழைப்புகளால் மனுதாரரின் உரிமை பாதிக்கப்பட்டிருப்பது உண்மை தான் என்றாலும், ரிட் வழக்கில் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட முடியாது' என்று தெரிவித்த நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்கும்படி படத்தயாரிப்பு நிறுவனம், இயக்குனர், தணிக்கைக் குழுவுக்கு உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 20க்கு தள்ளிவைத்தார்.






      Dinamalar
      Follow us