ADDED : ஆக 30, 2025 05:54 AM

சென்னை,: 'தமிழகத்தில் ஒருசில இடங்களில், செப்டம்பர் 4ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம், பந்தலுார் தாலுகா அலுவலகப் பகுதியில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, நீலகிரியில் 12; கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் தேவாலா, அவலாஞ்சியில், தலா 10 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், செப்., 4 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில், இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

