ADDED : ஏப் 08, 2026 03:55 AM
சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர்., நகர் பகுதிகளில் தலா, 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
மேற்கு வங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை வளி மண்டலத்தில், தமிழகம் அருகே ஒரு காற்றழுத்த பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பிற இடங்களில், வறண்ட வானிலை காணப்படும். தமிழகம், புதுச்சேரியில் இன்று, வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை, 37 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
