sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழர்கள் மீது மோடியின் அளவற்ற அன்பு; மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேச்சு

/

தமிழர்கள் மீது மோடியின் அளவற்ற அன்பு; மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேச்சு

தமிழர்கள் மீது மோடியின் அளவற்ற அன்பு; மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேச்சு

தமிழர்கள் மீது மோடியின் அளவற்ற அன்பு; மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேச்சு

3


ADDED : ஜன 30, 2025 10:51 PM

Google News

ADDED : ஜன 30, 2025 10:51 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; பிரதமர் மோடி தமிழர்கள் மீது அளவற்ற அன்பு வைத்துள்ளார் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

மதுரை மேலுார் பகுதி டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக அப்பகுதி மக்கள் நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்ற கிஷன் ரெட்டி பேசியதாவது:

பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் ஏராளமான அன்பை தெரிவித்துள்ளனர். தமிழர்களின் பெருமை, பாரம்பரியம், பண்பாட்டை உலகம் முழுவதும் மோடி கொண்டு செல்கிறார். தமிழர்கள் மீது தனிப்பட்ட முறையில் பற்றுக் கொண்டு செங்கோலை பார்லிமென்ட்டில் நிறுவி பெருமை சேர்த்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு பிரச்னை வந்து போது அதை மீட்டு தந்தவர் பிரதமர் மோடி. தமிழ் பண்பாட்டை காப்பதற்காக அனைத்து பணிகளையும் செய்து வருகிறார் மோடி. தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிர தமிழ் சங்கமம் நடத்தி காட்டியவர். இது குஜராத்திற்கும் தமிழகத்திற்கும் பண்பாட்டு சின்னமாக திகழ்ந்தது. தமிழக மீனவர்கள் இலங்கையில் சிக்கலுக்கு ஆளாகும்போது அவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் தந்தவர் மோடி.

தமிழக மக்கள் தேசியத்தையும் மோடியையும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us