மோடி இலங்கை செல்வதால் நடுக்கடலில் கெடுபிடி குறைவு
மோடி இலங்கை செல்வதால் நடுக்கடலில் கெடுபிடி குறைவு
ADDED : மார் 31, 2025 01:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வலையில் அதிக மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 460 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வழக்கம் போல இந்திய -- இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர்.
ஆனால், வழக்கமாக வரும் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து இல்லாததால், மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடித்து நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர்.
பெரும்பாலான மீனவர்கள் எதிர்பார்த்த சீலா மீன், பாரை மீன், குமுலா மீன்கள் அதிகமாக சிக்கின.
ஏப்., 5ல் இலங்கைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதால், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் கெடுபிடி காட்டவில்லை.
இதனால் அதிக மீன்வரத்து சிக்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.