sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை; கடலூரில் சோகம்

/

2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை; கடலூரில் சோகம்

2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை; கடலூரில் சோகம்

2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை; கடலூரில் சோகம்


ADDED : டிச 08, 2024 03:40 PM

Google News

ADDED : டிச 08, 2024 03:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்; கடலூரில் இருகுழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேப்பூரை அடுத்த மாளிகைபுர மேட்டு பகுதியைச் சேர்ந்தவர் அழகப்பன். எலக்ட்ரிசியனான இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த நித்யா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளனர்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்றிரவு இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிருப்தியடைந்த நித்யா, தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பொதுகிணற்றில் குதித்துள்ளார்.

இதில் மூவரும் உயிரிழந்தனர். கிணற்றில் சடலங்கள் கிடப்பதைக் கண்ட அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 3 பேரின் சடலங்களை மீட்டு விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us