sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அழுத்தம் கொடுக்காத எம்.பி.,க்கள்; 40 பேர் இருந்தும் என்ன பயன்? கேட்கிறார் இ.பி.எஸ்.,

/

அழுத்தம் கொடுக்காத எம்.பி.,க்கள்; 40 பேர் இருந்தும் என்ன பயன்? கேட்கிறார் இ.பி.எஸ்.,

அழுத்தம் கொடுக்காத எம்.பி.,க்கள்; 40 பேர் இருந்தும் என்ன பயன்? கேட்கிறார் இ.பி.எஸ்.,

அழுத்தம் கொடுக்காத எம்.பி.,க்கள்; 40 பேர் இருந்தும் என்ன பயன்? கேட்கிறார் இ.பி.எஸ்.,

4


ADDED : அக் 10, 2024 02:11 PM

Google News

ADDED : அக் 10, 2024 02:11 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: 'நீட் தேர்வை ரத்து செய்வதாக, தி.மு.க., அரசு போலி நாடகத்தை நடத்துகிறது. பார்லி.,யில் அழுத்தம் கொடுக்க தவறிவிட்டு, மற்றவர்கள் மீது பழிபோடுகிறார்கள்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.

சேலம், எடப்பாடியில் நீட் தேர்வால், தற்கொலை செய்து கொண்ட மாணவி புனிதா வீட்டிற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க., எடுத்த நடவடிக்கைகள் என்ன? தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களின் போலி அறிவிப்பால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.,வும்., காங்கிரசும் தான்.

போலி நாடகம்

நீட் தேர்வை ரத்து செய்வதாக, தி.மு.க., அரசு போலி நாடகத்தை நடத்துகிறது. பார்லி.,யில் அழுத்தம் கொடுக்க தவறிவிட்டு மற்றவர்கள் மீது பழிபோடுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் பலமுறை பிரதமரைச் சந்தித்தும் அழுத்தம் கொடுக்கவில்லை. மருத்துவ கனவு உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக தவறான முடிவை எடுக்காமல் இதர கோர்ஸ்களில் சேர்ந்து வாழ்வில் முன்னேறலாம்.

என்ன பயன்?

மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என நம்பி ஏமாந்த மாணவர்கள் உயிரை விட்டு வருகிறார்கள். 40 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு என்ன பயன்? தி.மு.க., எம்.பிக்கள் தகுந்த அழுத்தம் கொடுத்திருந்தால் நிச்சயம் தீர்வு கிடைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us