sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காரைக்குடியில் முளைக் கொட்டுத் திண்ணை கும்பாபிஷேக விழா: சீர்வரிசை தட்டுடன் பங்கேற்ற இஸ்லாமியர்கள்

/

காரைக்குடியில் முளைக் கொட்டுத் திண்ணை கும்பாபிஷேக விழா: சீர்வரிசை தட்டுடன் பங்கேற்ற இஸ்லாமியர்கள்

காரைக்குடியில் முளைக் கொட்டுத் திண்ணை கும்பாபிஷேக விழா: சீர்வரிசை தட்டுடன் பங்கேற்ற இஸ்லாமியர்கள்

காரைக்குடியில் முளைக் கொட்டுத் திண்ணை கும்பாபிஷேக விழா: சீர்வரிசை தட்டுடன் பங்கேற்ற இஸ்லாமியர்கள்

1


ADDED : பிப் 03, 2025 02:07 PM

Google News

ADDED : பிப் 03, 2025 02:07 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர் . இப்பகுதியில் உள்ள ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திண்ணை கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பள்ளிவாசல் ஜமாத் சார்பில் இஸ்லாமியர்கள் பழங்கள் சீர்வரிசை தட்டுகளுடன் வருகை தந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்சியில் இஸ்லாமிய பெண்களும் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

மத நல்லிணக்கத்திற்கும் மத ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை பூஜிக்கப்பட்ட புனித நீர் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க முளைகொட்டு திண்ணை விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து அம்மனுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காரைக்குடி மற்றும் அண்ணா நகர் சுற்றுப்புற பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்






      Dinamalar
      Follow us