கோவில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லிம் கவுன்சிலர் அழைப்பு
கோவில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லிம் கவுன்சிலர் அழைப்பு
ADDED : ஆக 08, 2025 02:51 AM

பெரியகுளம்:பெரியகுளம் நகராட்சி கூட்டத்தில், கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை, தி.மு.க.,வைச் சேர்ந்த முஸ்லிம் கவுன்சிலர், தலைவர் மற்றும் சக கவுன்சிலர்களிடம் வழங்கி, அழைப்பு விடுத்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி கூட்டம், நேற்று தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் சுமிதா தலைமையில் நடந்தது. கமிஷனர் தமிஹா சுல்தானா முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இதி ல், 12வது வார்டு தி.மு.க.,வைச் சேர்ந்த மு ஸ்லிம் கவுன்சிலர் சாஹிராபானு, தலைவர் உள்ளிட்ட அனைவரது இருக்கைக்கு நேரில் சென்று, தன் வார்டிலுள்ள செல்வ விநாயகர் கோவிலில் செப்., 4ல் நடக்கவுள்ள கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை கொடுத்து, 'கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, அழைப்பு விடுத்தார்.
முஸ்லிம் பெண் கவுன்சிலர், விநாயகர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கியது, மத நல்லிணக்கத்தை பேணுவதாக இருந்தது.