sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'கண்டா வரச்சொல்லுங்க' போஸ்டர் நாகை எம்.பி., ஆவேசம்

/

'கண்டா வரச்சொல்லுங்க' போஸ்டர் நாகை எம்.பி., ஆவேசம்

'கண்டா வரச்சொல்லுங்க' போஸ்டர் நாகை எம்.பி., ஆவேசம்

'கண்டா வரச்சொல்லுங்க' போஸ்டர் நாகை எம்.பி., ஆவேசம்


ADDED : மார் 01, 2024 12:09 AM

Google News

ADDED : மார் 01, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்:''சந்துக்குள் ஒளிந்தபடி, 'கண்டா வரச் சொல்லுங்க...' என குற்றவாளிகள் போல் கேட்பது அயோக்கியத்தனம்,'' என, நாகை இந்திய கம்யூ., எம்.பி., செல்வராஜ் ஆவேசப்பட்டார்.

தமிழ்நாடு கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற செல்வராஜ் எம்.பி., கூறியதாவது:

தமிழகம் முழுதும் 'கண்டா வரச் சொல்லுங்க...' என போஸ்டர் ஒட்டுபவர்கள், 'எம்.பி.,க்கள் எங்கே?' என கேள்வி கேட்க உரிமையிருக்கிறது. அவர்கள் அப்படி கேட்பதில் நியாயம் உள்ளது.

அதை விடுத்து மொட்டை நோட்டீஸ் ஒட்டி, சந்து, பொந்தில் நின்றபடி, 'கண்டா வரச் சொல்லுங்க' என குற்றவாளிகள் போல் கேட்பது அயோக்கியத்தனம்.

தைரியம் இருந்தால் நேரிடையாக எம்.பி.,யிடம் வந்து, ஏன் தொகுதி பக்கம் வரவில்லை என கேட்கலாம். அதற்கான உரிமை இருக்கிறது. நாங்கள் மறுக்கவில்லை. மாறாக பொந்துக்குள் ஒளிந்து கொண்டு கேட்கும் அயோக்கியர்களுக்கு பதில் சொல்ல தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us