sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேசிய வங்கி ஏடிஎம் உடைப்பு; 7 லட்சம் ரூபாய் கொள்ளை

/

தேசிய வங்கி ஏடிஎம் உடைப்பு; 7 லட்சம் ரூபாய் கொள்ளை

தேசிய வங்கி ஏடிஎம் உடைப்பு; 7 லட்சம் ரூபாய் கொள்ளை

தேசிய வங்கி ஏடிஎம் உடைப்பு; 7 லட்சம் ரூபாய் கொள்ளை

1


ADDED : ஜன 05, 2025 11:27 AM

Google News

ADDED : ஜன 05, 2025 11:27 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,ஐ உடைத்து 7 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் இந்தியன் வங்கியும் அதனை ஒட்டி ஏ.டி.எம்., மையமும் அமைந்துள்ளது. இதன் மூலம் மேலச்சாலை, அண்ணன் பெருமாள்கோவில், கீழச்சாலை, காத்திருப்பு, நாங்கூர் உள்ளிட்ட சுற்றுப்புறத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர்.

மெயின் ரோட்டின் அருகே மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்கு புறமான இடத்தில் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு காவலாளி கிடையாது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மூன்று பேர் முகமூடி அனிந்து வந்து, ஏ.டி.எம்., மிஷினை கடப்பாரை கொண்டு உடைத்து ரூ. 7 லட்சத்து 42 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் அக்கும்பல் அலாரம் சிசிடிவி கேமரா மின் இணைப்புகளை துண்டித்து விட்டு திருடியதுவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us