sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நவராத்திரி மூன்றாம் நாள்

/

நவராத்திரி மூன்றாம் நாள்

நவராத்திரி மூன்றாம் நாள்

நவராத்திரி மூன்றாம் நாள்


ADDED : அக் 04, 2024 08:30 PM

Google News

ADDED : அக் 04, 2024 08:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை மீனாட்சி அம்மன் இன்று (அக்.,05) பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

மலையத்துவஜ பாண்டியன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் பார்வதி மூன்று வயது குழந்தையாக தோன்றினாள். தடாதகை எனப் பெயரிட்டு வளர்த்தார் மன்னர். வில், வாள் பயிற்சி, குதிரையேற்றம் போன்ற 64 கலைகளையும் கற்று முடித்தாள். வெற்றி மங்கையான தடாதகை பருவ வயதை அடைந்தாள். மன்னர் மகளுக்கு பட்டம் சூட்டி இளவரசியாக்கினார். இதனால் பாண்டிய நாடு 'கன்னிநாடு' என பெயர் பெற்றது.

கண் இமைக்காமல் குஞ்சுகளை பார்வையால் பாதுகாக்கும் மீன் போல, தடாதகையும் மக்கள் நலனில் அக்கறை கொண்டாள். இதனால், 'மீன் போன்ற கண் கொண்டவள்' என்னும் பொருளில் 'கயல் கண்ணி', 'மீனாட்சி' என பெயர் பெற்றாள். மதுரையும் 'துாங்கா நகரம்' என்றானது. ராஜ அலங்கார ஆடை, ஆபரணத்துடன் பாண்டியருக்குரிய வேப்பம்பூ மாலை சூடி பட்டாபிஷேக கோலத்தில் பவனி வரும் அன்னை மீனாட்சியைத் தரிசித்தால் மன நிறைவான வாழ்வு அமையும்.

பாட வேண்டிய பாடல்

குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம் நின்குறிப்பறிந்து

மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி

வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்

பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.






      Dinamalar
      Follow us