sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ் கொடுத்த சம்பவத்தால் அதிர்ச்சி!

/

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ் கொடுத்த சம்பவத்தால் அதிர்ச்சி!

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ் கொடுத்த சம்பவத்தால் அதிர்ச்சி!

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ் கொடுத்த சம்பவத்தால் அதிர்ச்சி!

6


ADDED : நவ 10, 2024 10:48 AM

Google News

ADDED : நவ 10, 2024 10:48 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரேக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கையில் எலும்பு முறிவு என, வந்த நோயாளிக்கு, எக்ஸ்ரே பிலிம்க்கு பதிலாக மருத்துவமனை ஊழியர்கள் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த காளி பாண்டி என்பவர் ஹோட்டல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அவர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். டாக்டர் 'எக்ஸ்ரே' எடுக்க கூறிய நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள 'எக்ஸ்ரே' மையத்தில், 'எக்ஸ்ரே' எடுத்துள்ளார்.

இந்நிலையில் எக்ஸ்ரே ரிப்போர்ட்டை பிலிமுக்கு பதிலாக, ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தனர். இது குறித்து காளி பாண்டி மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது பிலிம் தீர்ந்து விட்டதாக அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். அவர் டாக்டரிடம் காண்பிக்க சென்றுள்ளார். டாக்டர்கள் இல்லாத காரணத்தினால் வீடு திரும்பினார்.

பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே ரிப்போர்ட்டாக கொடுக்கப்பட்ட ஜெராக்ஸை காட்டியுள்ளார். அங்கு ஜெராக்ஸ் வைத்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுப்பு தெரிவித்தனர். 'சாமானிய மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடும் நிலையில் இத்தகைய அலட்சியப் போக்கான நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது' என காளி ராஜ் வருத்தம் தெரிவித்தார்.

இது குறித்து தென்காசி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமலதாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'மாவட்ட அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுப்பதற்கு அனைத்து வசதிகளும் உள்ளது. மேலும் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுப்பதற்கு தேவையான அளவில் பிலிம் ரோல்கள் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நோயாளிகளின் எக்ஸ்ரே விவரங்கள் டிஜிட்டல் மூலமாக பரிந்துரை செய்யும் டாக்டர்களுக்கு இணையத்தில் அனுப்பி வைக்கப்படுவதால் அவர்கள் கம்ப்யூட்டரில் அதனை தெளிவாக பார்த்து நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us