sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.10 கோடி இழப்பீடு கேட்ட தனுஷ் வழக்கு எதிர்த்த 'நெட்பிளிக்ஸ்' நிறுவன மனு தள்ளுபடி

/

ரூ.10 கோடி இழப்பீடு கேட்ட தனுஷ் வழக்கு எதிர்த்த 'நெட்பிளிக்ஸ்' நிறுவன மனு தள்ளுபடி

ரூ.10 கோடி இழப்பீடு கேட்ட தனுஷ் வழக்கு எதிர்த்த 'நெட்பிளிக்ஸ்' நிறுவன மனு தள்ளுபடி

ரூ.10 கோடி இழப்பீடு கேட்ட தனுஷ் வழக்கு எதிர்த்த 'நெட்பிளிக்ஸ்' நிறுவன மனு தள்ளுபடி


ADDED : ஜன 29, 2025 01:00 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படக்காட்சிகளை பயன்படுத்தியதாக, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, நடிகர் தனுஷ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி, 'நெட்பிளிக்ஸ்' நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, மும்பையை சேர்ந்த 'நெட்பிளிக்ஸ்' நிறுவனம் வெளியிட்டது.

இதில், 2015ல் நடிகர் தனுஷ் நிறுவனமான, 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த, நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதையடுத்து, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, நயன்தாராவுக்கு தனுஷ், 'நோட்டீஸ்' அனுப்பினார். இதற்கு நயன்தாரா அளித்த பதிலில், தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், தனுஷின் வொண்டர்பார் நிறுவன இயக்குனர் சார்பில், 10 கோடி ரூபாய் இழப்பீடும், காட்சிகளை பயன்படுத்த தடை கேட்டும், நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்கக்கோரி, நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்கள், நீதிபதி அப்துல்குத்துாஸ் முன், விசாரணைக்கு வந்தன.

நெட்பிளிக்ஸ் தரப்பில், 'படத்தின் காட்சிகள், 2020 முதல் பொது தளத்தில் உள்ளன. கடந்தாண்டு டிச., 11ல், தனுஷிடம் இருந்து நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு, வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

'ஆவணப்படம் வெளியான ஒரு வாரத்துக்கு பின், தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதால், வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று, வாதிடப்பட்டது.

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில், 'ஆவணப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள், வொண்டர்பார் நிறுவனத்துக்கு சொந்தமானவை. காட்சிகளை தவிர்க்க கோரிய போது, நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று, நயன்தாரார பொது வெளியில் கடிதம் எழுதினார்' என, வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அப்துல் குத்துாஸ், நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வொண்டர்பார் நிறுவனத்தின் தரப்பில், தனுஷ் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கு விசாரணையை, பிப்., 5க்கு தள்ளி வைத்தார்.






      Dinamalar
      Follow us