ADDED : செப் 27, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை துறையின் புயல்கள் தொடர்பான அறிக்கை:
மேற்கு திசை காற்று முடிவுக்கு வந்துள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய மாற்றங்கள் நிகழ்கின்றன. கடலின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பத்தின் அடிப்படையில், இந்திய பெருங்கடலில், அட்ச ரேகை பகுதியில், அந்தமானுக்கு தெற்கில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளது.
இந்த சுழற்சி, மேக கூட்டங்களின் அடர்த்தி மற்றும் கடல்பரப்பு வெப்ப நிலையால், காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகலாம். இது, கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.