ADDED : ஆக 29, 2025 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குற்றவழக்கில் சிக்கி, 30 நாட்கள் சிறையில் இருந்தால் போதும், பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும், பதவி பறிபோகும் என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
இந்த சட்டம், முழு வேகத்தில் அமலுக்கு வரும்போது, படிப்படியாக ஊழல் குறையும்.
தமிழகத்தில், தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் விளம்பர மாடல் அரசு, என்ன தவறு செய்தாலும், விளம்பரத்தைக் கொண்டு மறைத்து, மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என நினைக்கிறது. ஆனால், அடித்தட்டு மக்கள், அரசுக்கு எதிராக எரிமலை போல் வெடிக்க காத்திருக்கின்றனர்.
- கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம்