sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உதயநிதி வெளியிட்ட புதிய 'லோகோ': விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி

/

உதயநிதி வெளியிட்ட புதிய 'லோகோ': விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி

உதயநிதி வெளியிட்ட புதிய 'லோகோ': விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி

உதயநிதி வெளியிட்ட புதிய 'லோகோ': விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி

16


ADDED : ஜூன் 27, 2024 05:05 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 05:05 PM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: அமைச்சர் உதயநிதி வெளியிட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய 'லோகோ' குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கென, 1996 முதல் ஒரு லோகோ பயன்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் திருப்பூர் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, புதிய லோகோ வெளியிட்டார்.

அது குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: முந்தைய லோகோவில் தடகள விளையாட்டு வீரர் நின்றிருப்பது போன்று இடம் பெற்றிருக்கும். எந்த ஒரு விளையாட்டையும் முன்னிலைப்படுத்தாமல் விளையாட்டு வீரர் என்பதை மட்டுமே தெரிவிப்பதாக இது இருந்தது.

உதயநிதி வெளியிட்டுள்ள லோகோவில், வாலிபால், பளு துாக்குதல், சதுரங்கம், டென்னிஸ், கால்பந்து, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளின் வடிவமைப்பு இடம் பெற்றுள்ளது.

கோகோ, டென்னிகாய்ட், நீச்சல், எறிபந்து, ஹேண்ட்பால், வில்வித்தை, சைக்கிளிங், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், கேரம், யோகா உள்ளிட்டவை இடம் பெறவில்லை.

ஆணையம் சார்பில் 30க்கும் மேற்பட்ட விளையாட்டுகளுக்கு போட்டி நடத்தப்படும் நிலையில், குறிப்பிட்ட, 13 விளையாட்டுகள் மட்டுமே புதிய லோகோவில் இடம் பெற்றுள்ளன. இது விளையாட்டு ஆர்வலர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. முழுமையாக கருத்துக் கேட்டு பின், புதிய லோகோ வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us