sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழில் நிறுவன கட்டடங்களுக்கான வாகன நிறுத்துமிட விதிகளில் தளர்வு வீட்டுவசதி துறை புதிய உத்தரவு

/

தொழில் நிறுவன கட்டடங்களுக்கான வாகன நிறுத்துமிட விதிகளில் தளர்வு வீட்டுவசதி துறை புதிய உத்தரவு

தொழில் நிறுவன கட்டடங்களுக்கான வாகன நிறுத்துமிட விதிகளில் தளர்வு வீட்டுவசதி துறை புதிய உத்தரவு

தொழில் நிறுவன கட்டடங்களுக்கான வாகன நிறுத்துமிட விதிகளில் தளர்வு வீட்டுவசதி துறை புதிய உத்தரவு


ADDED : டிச 13, 2024 01:21 AM

Google News

ADDED : டிச 13, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன கட்டடங்களுக்கான தளபரப்பு குறியீடு, வாகன நிறுத்துமிட விதிகளில் மாற்றம் செய்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொது கட்டட விதிகள், 2019ல் அறிவிக்கப்பட்டன. இதில், குடியிருப்பு கட்டடங்களுக்கான உயரம், வாகன நிறுத்துமிடம், சாலை அகலம் தொடர்பாக, பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தொழில், வணிக நிறுவன கட்டடங்களுக்கான புதிய விதிகளை சேர்த்தும், பழைய விதிகளை திருத்தியும், கடந்த நவம்பர், 11ல் தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவில் சில குறைபாடுகள் தெரியவந்த நிலையில், பொது கட்டட விதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான புதிய உத்தரவை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்துள்ளது. இதில், அதிக உயரமில்லாத தொழிலக கட்டடங்களுக்கான விதிகளில், பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம்:

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக, அதிக உயரமில்லாத கட்டடங்கள் கட்டும் போது, அதற்கான தளபரப்பு குறியீடு, 1.5 மடங்காக இருப்பது, இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள் போன்று, அடுக்குமாடி தொழில் கட்டடங்கள், தொழில் நிறுவனங்கள் சார்ந்த விடுதிகள் கட்டும் திட்டங்களுக்கான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிக உயரமில்லாத கட்டடங்கள் கட்டுவதற்கான தளபரப்பு குறியீடு, நிலத்தின் பரப்பில் மூன்று மடங்காக அனுமதிக்கப்படும்.

குடியிருப்பு கட்டடங்களில், 750 சதுர அடிக்கு ஒரு கார் நிறுத்துமிடம் ஒதுக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. இதில், தொழில் நிறுவனங்களுக்கான வாகன நிறுத்துமிடங்கள், தனியாக பிரித்து வழங்கப்படாமல் இருந்தன.

தற்போது, தொழில் நிறுவனங்களின் தன்மை, பயன்பாடு அடிப்படையில், வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி உற்பத்தி, சேவை, உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கட்டடங்களில், 1,500 சதுர அடிக்கு ஒரு கார் நிறுத்துமிடம், 750 சதுர அடிக்கு ஒரு லாரி நிறுத்துமிடம் ஒதுக்கலாம்.

குடிசை தொழில் பிரிவில் வரும் நிறுவனங்களுக்காக கட்டப்படும் கட்டடங்களில், 1,500 சதுர அடிக்கு ஒரு கார் நிறுத்துமிடம் ஒதுக்கினால் போதும். கணினி மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் கட்டடங்களிலும், 1,500 சதுர அடிக்கு ஒரு கார் நிறுத்துமிடம் ஒதுக்கலாம்.

ஆடைகள் தயாரிப்பு மற்றும் 'பேக்கேஜிங்' நிறுவனங்களுக்கான கட்டடங்களில், 2,000 சதுர அடிக்கு ஒரு கார் நிறுத்துமிடம் ஒதுக்கினால் போதும். தகவல் தொழில்நுட்பம், கணினி மென்பொருள், உயிரி தகவல் தொழில்நுட்பவியல் நிறுவன கட்டடங்களில், 750 சதுர அடிக்கு ஒரு கார் நிறுத்துமிடம் ஒதுக்க வேண்டும்.

அடுக்குமாடி தொழில்கூட கட்டடங்கள் கட்டும்போது, 1,500 சதுர அடிக்கு ஒரு கார் நிறுத்துமிடம், 750 சதுர அடிக்கு ஒரு லாரி நிறுத்துமிடம் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us