sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய கட்சிகள் 2 ஆண்டுக்கு பின் காணாமல் போய்விடும் முன்னாள் அமைச்சர் சண்முகம் எரிச்சல்

/

புதிய கட்சிகள் 2 ஆண்டுக்கு பின் காணாமல் போய்விடும் முன்னாள் அமைச்சர் சண்முகம் எரிச்சல்

புதிய கட்சிகள் 2 ஆண்டுக்கு பின் காணாமல் போய்விடும் முன்னாள் அமைச்சர் சண்முகம் எரிச்சல்

புதிய கட்சிகள் 2 ஆண்டுக்கு பின் காணாமல் போய்விடும் முன்னாள் அமைச்சர் சண்முகம் எரிச்சல்


ADDED : அக் 06, 2024 07:48 PM

Google News

ADDED : அக் 06, 2024 07:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி:'புதிய கட்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காணாமல் போய்விடும்' என முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம், வல்லம் பகுதியில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:

தினமும் புதிது புதிதாக யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கின்றனர். அவர்கள் போய் விடுவார்கள். கமல் கட்சி ஆரம்பித்த உடன் அதோ வந்து விட்டார், இதோ வந்து விட்டார் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், என்ன நடந்தது. அதே போன்று, புதிய கட்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காணாமல் போய்விடும்.

இதற்கு காரணம் இந்த கட்சிகளிடம் அடிப்படை கட்டமைப்பு கிடையாது. அ.தி.மு.க., - தி.மு.க., என இரண்டு கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு உள்ள கட்சிகள். நான் தேர்தலுக்கு முன்பே பா.ஜ., - தி.மு.க., கூட்டணி வரும் என கூறினேன். இப்போது நடந்து விட்டது.

கடந்த 15 நாட்களுக்கு முன் நிர்மலா சீத்தாராமன் தமிழ்நாட்டுக்கு வந்தபோது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நாங்கள் ஏன் பணம் தரவேண்டும். அது தமிழக அரசு சுயநிதியில் செய்து கொள்வதாக ஒப்பந்தம் போட்டுள்ளது என்றார். கடந்த வாரம் ஸ்டாலின் டில்லி சென்றார். பெரிய அய்யாவை பார்த்து கும்பிடு போட்டார். 45 நிமிடம் பேசினார். இப்போது நிர்மலா சீத்தாராமன் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு 65 சதவீதம் நிதியை தரும் என அறிக்கை விடுகிறார்.

பா.ஜ., -தி.மு.க., இடையே நேரடி உறவு உள்ளது. தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் விழித்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு சண்முகம் பேசினார்.






      Dinamalar
      Follow us