sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

1.54 லட்சம் பேருக்கு புது ரேஷன் கார்டுகள்

/

1.54 லட்சம் பேருக்கு புது ரேஷன் கார்டுகள்

1.54 லட்சம் பேருக்கு புது ரேஷன் கார்டுகள்

1.54 லட்சம் பேருக்கு புது ரேஷன் கார்டுகள்


ADDED : டிச 08, 2024 12:52 AM

Google News

ADDED : டிச 08, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், 1.54 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்க, உணவு வழங்கல் துறைக்கு, தமிழக அரசின் மின் ஆளுமை முகமை ஒப்புதல் அளித்து உள்ளது.

புது ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகள் பரிசீலித்து, கார்டுகள் வழங்க ஒப்புதல் தருவர்.

அரசு சலுகைகளை பெற ஒரே குடும்பத்தில் வசிக்கும் பலர், தனித்தனியாக வசிப்பதாக சொல்லி, ரேஷன் கார்டுக்கு அதிகளவில் விண்ணப்பம் செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. எனவே, விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

அந்த விண்ணப்பதாரர் பெயர், பெற்றோரின் கார்டில் உள்ளதா, தனியாக வசிப்பதற்கு உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா உள்ளிட்ட விபரங்களை, தமிழக அரசின், 'இ - கவர்னன்ஸ்' எனப்படும், மின் ஆளுமை முகமை சரிபார்க்கிறது.

பின், தகுதியான விண்ணப்பதாரருக்கு ரேஷன் கார்டு வழங்க, உணவு வழங்கல் துறைக்கு, அது பரிந்துரை செய்கிறது. அதன் அடிப்படையில், புதிய ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்கப்படுகிறது.

அதன்படி, கடந்த நான்கு மாதங்களில் பெறப்பட்ட, 2.84 லட்சம் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களில், 1.54 லட்சம் பயனாளிகளுக்கு கார்டுகள் வழங்க, மின் ஆளுமை முகமை ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த பயனாளிகளுக்கு கார்டுகள் வழங்கும் பணியில், உணவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us