ADDED : ஜன 23, 2026 03:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: எழும்பூர் - கன்னியாகுமரி ரயில் உட்பட, 109 விரைவு ரயில்களுக்கு, கூடுதல் நிறுத்தம் வழங்கி, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அறிக்கை:
ரயில் பயணி யரின் கோரிக்கையை ஏற்று, கூடுதல் நிறுத்தங்களுக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
எழும்பூர் - கன்னியாகுமரி விரைவு ரயில் கோவில்பட்டியிலும், கோவை - சென்ட்ரல் ரயிலுக்கு திருவள்ளூரிலும், கர்நாடகா மாநிலம் மங்களூரு - சென்ட்ரல், திருவனந்தபுரம் - சென்ட்ரல் ரயில்கள் பெரம்பூரிலும், தலா இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும்.
இதேபோல், மொத்தம் 109 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. புதிய நிறுத்தம் வரும் 26ம் தேதி முதல் அமலாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

