நேரில் நின்று பேசும் தெய்வம்! - இன்று உலக அன்னையர் தினம்-
நேரில் நின்று பேசும் தெய்வம்! - இன்று உலக அன்னையர் தினம்-
ADDED : மே 13, 2018 01:56 AM

உலக வரலாற்றில் இயற்கையையும், அன்னையையும் தெய்வங்களாக கருதி வழிபட்டுள்ளனர். 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என நம் கலாசாரம் அன்னையருக்கு தான் முதலிடம் தந்திருக்கிறது. படைத்தவன் தான் கடவுள் எனில், நம்மை படைத்த அன்னையர் தான் கடவுள். அன்னை தான் அனைத்துக்கும் அடிப்படையானவள். அவள் இல்லையெனில், நாம் இந்த மண்ணில் அவதரித்திருக்க முடியாது.
சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும் ஆசான் என எத்தனையோ பாத்திரங்களில் பெண் வலம் வந்தாலும், அன்னை என்ற பாத்திரமே உன்னதமானது. உலகில் ஈடு இணையற்றது. அனைவருக்கும், அன்னையே முதல் தெய்வம். நம்மை உலகுக்கு அடையாளம் காட்டிய அன்னையை, எந்த சூழ்நிலையிலும் கைவிடக்கூடாது. வயதான காலத்திலும், அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும் மே இரண்டாவது ஞாயிறு (மே 13), உலக அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று நேரிலோ அல்லது போன் மூலமோ அன்னையருக்கு வாழ்த்துக்கூறி, ஆசிர்வாதத்தை பெற மறவாதீர்.
எப்படி வந்தது:
தாய்க்கு தலைவணங்கு:
