sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

13 ஆண்டுகளாக கால்நடை ஆய்வாளர் பணியிடங்களில் நியமனம் இல்லை; கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

/

13 ஆண்டுகளாக கால்நடை ஆய்வாளர் பணியிடங்களில் நியமனம் இல்லை; கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

13 ஆண்டுகளாக கால்நடை ஆய்வாளர் பணியிடங்களில் நியமனம் இல்லை; கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

13 ஆண்டுகளாக கால்நடை ஆய்வாளர் பணியிடங்களில் நியமனம் இல்லை; கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்


ADDED : டிச 30, 2024 11:26 PM

Google News

ADDED : டிச 30, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: மாநிலத்தில் 13 ஆண்டுகளாக கால்நடை ஆய்வாளர்கள் புதிதாக நியமிக்கப்படாததால் கிராமங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை ஆய்வாளர் கிரேடு 2 என நியமனம் செய்யப்பட்டு மருந்தகங்களில் பணிபுரிவர். பதவி உயர்வு பெற்று கிரேடு 1 என கிராமங்களில் உள்ள கிளை நிலையங்களில் நியமிக்கப்படுவர். இவர்கள் கால்நடைகளுக்கு சினை பார்ப்பது, சினை ஊசி செலுத்துவது, சிறு சிறு நோய்களுக்கு மருந்து கொடுப்பர்.

தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரம் கால்நடை ஆய்வாளர்கள் பணியிடங்களில் தற்போது 50 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளது. 2011 க்கு பிறகு 13 ஆண்டுகளாக கால்நடை ஆய்வாளர்கள் புதிததாக நியமிக்கப்படவில்லை. இதனால் கிராமங்களில் உள்ள கிளை நிலையங்கள் பெரும்பாலானவை பூட்டப்பட்டுள்ளன. இதனால் கிராமங்களில் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது: கால்நடை பராமரிப்புத்துறையில் அனைத்து நிலைகளிலும் காலி பணியிடங்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக ஆய்வாளர் பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளன. நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்றனர்.






      Dinamalar
      Follow us