ADDED : ஆக 30, 2025 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேயர் அன்பழகன் கூறுகையில், ''கவுன்சிலர் ஒருவர் என்னைப் பார்த்து மேயருக்கு தகுதியில்லாதவர் என்று கூறியது வருத்தமளிக்கிறது. என் மீது தனிப்பட்ட வெறுப்பில் தி.மு.க., கவுன்சிலர்களே கேள்வி கேட்கின்றனர். டெண்டரில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை. அது தவறான தகவல்.
''ஏற்கனவே, 24 லட்சத்துக்கு போன ஏலம், தற்போது, 28 லட்சம் ரூபாய்க்கு போயுள்ளது. மேயரை பிடிக்கவில்லை என்றால், அதிகாரி மற்றும் இன்ஜினியர்களிடம் கேட்கலாம். இதற்கு முன் மேயராக இருந்தவர்கள் கூட, கவுன் சிலரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்,'' என்றார்.