sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு அரசாணை, நிதி வரவில்லை

/

முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு அரசாணை, நிதி வரவில்லை

முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு அரசாணை, நிதி வரவில்லை

முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு அரசாணை, நிதி வரவில்லை

2


ADDED : மே 06, 2025 07:30 AM

Google News

ADDED : மே 06, 2025 07:30 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,: சிவகங்கையில் ஜன.21ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ.169 கோடி திட்டங்கள் குறித்து அரசாணை கூட இது வரை வெளிவரவில்லை. இத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருமா என்ற சந்தேகம் சிவகங்கை மாவட்ட மக்களிடம் எழுந்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக சென்று, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். ஜன., 21ல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி வளாகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார்.

அவர் பேசும் போது, சிவகங்கைக்கு 'ைஹலைட்' ஆக 3 திட்டங்களை அறிவிக்க உள்ளதாக கூறி, சிவகங்கையில் ரூ.89 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம், அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதியான திருப்புத்துாரில் ரூ.50 கோடியில் புறவழிச்சாலை திட்டம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காரைக்குடிக்கு ரூ.30 கோடியில் புதிய மாநகராட்சி கட்டடம் கட்டித்தரப்படும் என அறிவித்தார். ஆனால் இது வரை அதற்கான அரசாணையோ, நிதி ஒதுக்கீடு அறிவிப்போ வரவில்லை. சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்படலாம் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது சிவகங்கை மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது: மூன்று திட்டங்களுக்கான அரசாணை வரவில்லை. இதற்கான முன்மொழிவை அரசின் பார்வைக்கு அனுப்பியுள்ளோம், என்றார்.






      Dinamalar
      Follow us