sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயில்களில் இரவு நேரத்தில் 'அலைபேசி சார்ஜிங் நோ'

/

ரயில்களில் இரவு நேரத்தில் 'அலைபேசி சார்ஜிங் நோ'

ரயில்களில் இரவு நேரத்தில் 'அலைபேசி சார்ஜிங் நோ'

ரயில்களில் இரவு நேரத்தில் 'அலைபேசி சார்ஜிங் நோ'


ADDED : ஜன 29, 2025 01:59 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ரயில்வே வாரிய உத்தரவின்படி, ரயில்களில் தீ விபத்துகளை தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில், ரயில் பெட்டிகளில் அலைபேசி சார்ஜ் செய்யும் பிளக் பாயின்ட்களுக்கு, மின் இணைப்பு ரத்து செய்யப்படுகிறது. இது, கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

எனினும், சமீப காலமாக ரயில் பெட்டிகளில், 'சார்ஜிங் பாயின்ட்' வேலை செய்யவில்லை' என, பயணியர் சிலர் ரயில்வே உதவி எண்ணுக்கும் செயலிக்கும் புகார் தெரிவித்து வருகின்றனர். சிலர் சமூக வலைதளத்தில் புகாராக எழுதி வருகின்றனர்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், '2014ல் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட உத்தரவின்படி, ரயில் பெட்டிகளில் சார்ஜிங் பாயின்ட்களுக்கு, இரவு 11:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை, மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இது, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை' என்றனர்.






      Dinamalar
      Follow us