தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விலகியது வடகிழக்கு பருவமழை

 விலகியது வடகிழக்கு பருவமழை

 விலகியது வடகிழக்கு பருவமழை


ADDED : ஜன 20, 2026 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 07:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், வடகிழக்கு பருவமழை விலகியது' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16ல் வடகிழக்கு பருவமழை துவங்கியது. காலண்டர் கணக்கு அடிப்படையில், இயல்பான அளவான 44 செ.மீ.,க்கு பதில், 42 செ.மீ., அளவுக்கு, இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்தது.

ஜன., 16ல் வடகிழக்கு பருவமழை விலகும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று விலகியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை காணப்படும்; அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும்.

நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட குறைந்து காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; அதிகாலை சில இடங்களில், லேசான பனிமூட்டம் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us