sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தீபாவுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு தடை

/

தீபாவுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு தடை

தீபாவுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு தடை

தீபாவுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு தடை


ADDED : ஆக 21, 2025 01:33 AM

Google News

ADDED : ஆக 21, 2025 01:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 36.56 கோடி ரூபாயை செலுத்தக் கோரி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித் துறை 'நோட்டீஸ்' அனுப்பியது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் ஆஜராகி, ''சட்டப்படி 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஏழு நாட்களில் செலுத்த வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது,'' என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதி, கடந்த ஜூலை 23ல் அனுப்பிய நோட்டீஸ் அடிப்படையில் வசூல் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என, வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு செப்., 2ம் தேதிக்குள் பதிலளிக்க, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us