sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உத்தரவாதத்தை மீறி 'டெண்டர்' வேளாண்துறை செயலருக்கு 'நோட்டீஸ்'

/

உத்தரவாதத்தை மீறி 'டெண்டர்' வேளாண்துறை செயலருக்கு 'நோட்டீஸ்'

உத்தரவாதத்தை மீறி 'டெண்டர்' வேளாண்துறை செயலருக்கு 'நோட்டீஸ்'

உத்தரவாதத்தை மீறி 'டெண்டர்' வேளாண்துறை செயலருக்கு 'நோட்டீஸ்'


ADDED : ஏப் 27, 2025 02:26 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை மீறி, 21 கோடி ரூபாயில், திரவ இயற்கை உரம் கொள்முதலை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வேளாண் துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உர உயிரூக்கி


கடலுார் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் தாக்கல் செய்த மனு:

விவசாய பயன்பாட்டுக்காக, 'லிக்கியூட் ஆர்கானிக்' என்ற திரவ இயற்கை உர உயிரூக்கியை, 21 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய, கடந்தாண்டு நவம்பர், 18ல் 'டெண்டர்' அறிவிப்பை, தமிழக வேளாண் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

இந்த இயற்கை உர உயிரூக்கி, கடல்பாசி மூலங்களில் இருந்து எடுத்து, விவசாயத்துக்கு பயன்படுத்தினால், உற்பத்தி பெருகும் என, மத்திய அரசின் உரக் கட்டுப்பாட்டு ஆணையம் கூறுகிறது.

ஆனால், தமிழக அரசு கொள்முதல் செய்யும் இந்த திரவ இயற்கை உர உயிரூக்கி என்பது என்ன; அது எந்த வகையானது என, எதையும் டெண்டர் அறிவிப்பில் கூறவில்லை.

இது, மத்திய உரக்கட்டுப்பாட்டு ஆணைய உத்தரவுக்கு எதிரானது. எனவே, அந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, உயர் நீதிமன்ற, 'முதல் அமர்வு' முன் கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், 'அரசு விளக்கத்தை கேட்டு தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும்; அதுவரை டெண்டரை இறுதி செய்ய மாட்டோம்' என, உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அவமதிப்பு வழக்கு


'இதை மீறி, கடந்த ஜனவரியில், 21 கோடி ரூபாய்க்கு, திரவ இயற்கை உர உயிரூக்கியை கொள்முதல் செய்ய, டெண்டர் கோரி உள்ளதால், இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்' என, மனுதாரர் பி.ஜோதிபாசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜராகி, ''நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை மீறி, டெண்டரை இறுதி செய்து உள்ளனர். இது, நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல்,'' என்றார்.

தமிழக அரசு தரப்பில், 'ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட டெண்டருக்கும், தற்போது இறுதி செய்யப்பட்ட டெண்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால், நீதிமன்ற அவமதிப்பு ஆகாது' என்று கூறப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நியாயமற்றது என, இந்த நீதிமன்றம் கருதவில்லை.

'எனவே, இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ள தமிழக வேளாண்மை துறை செயலர் வி.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை துறை இயக்குநர் பி.முருகேஷ், கூடுதல் இயக்குநர் ஆர்.அசோக் ஆகியோர், ஜூன் 16ம் தேதிக்குள், இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us