sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கல்வெட்டு நகல்களை தமிழகத்திற்கு மாற்ற வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

/

கல்வெட்டு நகல்களை தமிழகத்திற்கு மாற்ற வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

கல்வெட்டு நகல்களை தமிழகத்திற்கு மாற்ற வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

கல்வெட்டு நகல்களை தமிழகத்திற்கு மாற்ற வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்


ADDED : மார் 08, 2024 01:59 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டு நகல்களை தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் மணிமாறன் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழக பழமையான கல்வெட்டுகள் படி எடுத்தல் முறையில், காகிதத்தில் தொல்லியல் துறையால் நகல்கள் எடுக்கப்பட்டன. அவை கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள மத்திய கல்வெட்டு ஆய்வு மையத்தில் உள்ளன. மைசூரு மையத்திலுள்ள தமிழ் கல்வெட்டு நகல்களை முறையாக பராமரிக்கவில்லை. அவற்றை தமிழக தொல்லியல்துறைக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு, மத்திய கலாசார துறை செயலர், தமிழக தொல்லியல் துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி நான்கு வாரங்கள் ஒத்திவைத்தது.






      Dinamalar
      Follow us